சாவகச்சேரி கவிஞர் த.நாகேஸ்வரனின் மணிவிழா
........................................................................................
தென்மராட்சியின் பிரபல தமிழாசிரியரும் கவிஞருமாகிய த.நாகேஸ்வரனின் மணிவிழா எதிர்வரும் 28.04.2018 சனிக்கிழமை காலை 9 மணிக்கு சாவகச்சேரி இந்துக் கல்லூரி பிரதான மண்டபத்தில் விழாக்குழுத் தலைவரும் சாவகச்சேரி இந்துக் கல்லூரி அதிபருமாகிய ந.சர்வேஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ளது.
.
தென்மராட்சியின் பொது அமைப்புக்கள், விழா நாயகரின் பழைய மாணவர்கள், தென்மராட்சி இலக்கிய அணியினர், விழா நாயகரின் ஸ்ரான்போட் தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள், மாணவர்களை உள்ளடக்கிய கூட்டத்தில் விழாக் குழு ஒன்றும் தெரிவு செய்யப்பட்டது.
.
இதன்படி தலைவராக சாவகச்சேரி இந்துக் கல்லூரி அதிபர் ந.சர்வேஸ்வரனும் இணைச்செயலாளர்களாக திருக்கணித பதிப்பக முகாமையாளர் கா.சிவஞானசுந்தரம், ஓய்வுநிலை உபஅதிபரும் ஸ்ரான்போட் நிறுவன கணித ஆசிரியருமாகிய சிவபாதசுந்தரம் ஆகியோரும் பொருளாளராக லயன் வ.ஸ்ரீபிரகாஸ”ம் தெரிவாகியுள்ளனர்.
.
விழாவின் போது கவிஞர் த.நாகேஸ்வரனின் கவியரங்கக் கவிதைகள் நூலும் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.
..
கவிஞர் த.நாகேஸ்வரன் அவர்கள் கடந்த 40 ஆண்டுகளாகத் தென்மராட்சியில் தமிழ்ப் பாடத்தைப் போதித்து வருவதுடன் இலக்கிய மற்றும் ஆன்மீக செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றார். (ஆர்வமுள்ள பழைய மாணவர்கள் வாழ்த்துச் சொல்ல விரும்பின் கவிஞர் த.நாகேஸ்வரனின் தொடர்பு இல : 0094 776445939)

sir good work
ReplyDelete