சாவகச்சேரி கவிஞர் த.நாகேஸ்வரனின் மணிவிழா ........................................................................................ தென்மராட்சியின் பிரபல தமிழாசிரியரும் கவிஞருமாகிய த.நாகேஸ்வரனின் மணிவிழா எதிர்வரும் 28.04.2018 சனிக்கிழமை காலை 9 மணிக்கு சாவகச்சேரி இந்துக் கல்லூரி பிரதான மண்டபத்தில் விழாக்குழுத் தலைவரும் சாவகச்சேரி இந்துக் கல்லூரி அதிபருமாகிய ந.சர்வேஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ளது. . தென்மராட்சியின் பொது அமைப்புக்கள், விழா நாயகரின் பழைய மாணவர்கள், தென்மராட்சி இலக்கிய அணியினர், விழா நாயகரின் ஸ்ரான்போட் தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள், மாணவர்களை உள்ளடக்கிய கூட்டத்தில் விழாக் குழு ஒன்றும் தெரிவு செய்யப்பட்டது. . இதன்படி தலைவராக சாவகச்சேரி இந்துக் கல்லூரி அதிபர் ந.சர்வேஸ்வரனும் இணைச்செயலாளர்களாக திருக்கணித பதிப்பக முகாமையாளர் கா.சிவஞானசுந்தரம், ஓய்வுநிலை உபஅதிபரும் ஸ்ரான்போட் நிறுவன கணித ஆசிரியருமாகிய சிவபாதசுந்தரம் ஆகியோரும் பொருளாளராக லயன் வ.ஸ்ரீபிரகாஸ”ம் தெரிவாகியுள்ளனர். . விழாவின் போது கவிஞர் த.நாகேஸ்வரனின் கவியரங்கக் கவிதைகள் நூலும் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது. .. கவி...